Friday, January 17, 2025

(Nirvana Shatakam Lyrics in Tamil) மற்றும் பொருள் (Nirvana Shatakam Meaning in English and Tamil)

மனோ புத்தி அஹங்கார சித்தானி நாஹம்
ந ச ஷ்ரோத்ரஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே
ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயுஹு
சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

நான் மனமும் அல்ல, புத்தி, அஹங்காரம் அல்லது சித்தமும் அல்ல,
நான் காதுகளும் அல்ல, தோல், மூக்கு அல்லது கண்களும் அல்ல,
நான் விண்வெளியும் அல்ல, பூமியும் அல்ல, நெருப்பு, நீர் அல்லது காற்றும் அல்ல,
நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம்,
ஷிவன் நான் ஷிவமே நான்

ந ச ப்ராண சங்யோ ந வை பஞ்ச வாயுஹு
ந வா சப்த தாதுர் ந வா பஞ்ச கோஷ:
ந வாக் பாணி-பாதம் ந சோபஸ்த்த பாயு:
சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

நான் பிராணமும் அல்ல, உடலின் ஐந்து வாயுக்களும் அல்ல,
நான் உடலின் ஏழு தாதுக்களும் அல்ல, ஐந்து கோசங்களும் அல்ல
நான் பேச்சிற்கான உறுப்பும் அல்ல, கைகள், கால்கள், பிறப்புறுப்பு அல்லது குதமும் அல்ல
நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம்,
ஷிவன் நான் ஷிவமே நான்

ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹௌ
ந மே வை மதோ நைவ மாத் சர்ய பாவஹ
ந தர்மோ ந ச்சார்தோ ந காமோ ந மோக்ஷஹ
சிதாநந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

என்னுள் வெறுப்பும் விருப்பும் இல்லை, பேராசையும் மதிமயக்கமும் இல்லை
எனக்குள் பெருமை, கர்வம் அல்லது பொறாமை இல்லை,
எனக்கு கடமை இல்லை, செல்வம், காமம் அல்லது விடுதலைக்கான ஆசையும் இல்லை,
நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம்,
ஷிவன் நான் ஷிவமே நான்

ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்
ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதா ந யக்ஞஹ
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா
சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

எனக்கு நல்வினை தீவினை இல்லை, இன்பம் இல்லை துன்பம் இல்லை,
எனக்கு தேவை மந்திரங்கள் இல்லை, யாத்திரைகள் இல்லை, வேதங்களும் சடங்குகளும் இல்லை,
நான் அனுபவமோ அனுபவிக்கப்பட்டதோ அல்லது அனுபவித்தவனோ அல்ல,
நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம்,
ஷிவன் நான் ஷிவமே நான்

ந மே ம்ருத்யு ஷங்கா ந மேஜாதி பேதஹ
பிதா நைவ மே நைவ மாதா ந ஜன்மஹ
ந பன்துர் ந மித்ரம் குரூர் நைவ சிஷ்யஹ
சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

எனக்கு மரணம் இல்லை மரண பயமும் இல்லை, சாதி, மதம் இல்லை,
எனக்கு தந்தையும் இல்லை, தாயும் இல்லை, ஏனென்றால் நான் பிறந்ததுமில்லை,
நான் உறவினனோ, நண்பனோ, ஆசிரியனோ அல்லது சீடனோ இல்லை
நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம்,
ஷிவன் நான் ஷிவமே நான்

அஹம் நிர்விகல்போ நிராகாரோ ரூபோ
விபுத் வாட்ச்ச ஸர்வத்ர ஸர்வேந்த்ரியானாம்
ந ச்ச சங்கதம் நைவ முக்திர் ந மேயஹ
சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

நான் இருமை இல்லாதவன், என் வடிவம் உருவமற்றது,
நான் எல்லா இடங்களிலும் இருக்கிறேன், எல்லா புலன்களிலும் பரவியிருக்கிறேன்,
நான் பற்றுள்ளவனில்லை, சுதந்திரமாகவோ சிறைபிடிக்கப்பட்டவனாகவோ இல்லை
நான் விழிப்புணர்வு மற்றும் பேரின்பத்தின் வடிவம், ஷிவன் நான் ஷிவமே நான்

 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

மரங்கள் பாடும் காற்றின் ராகம்

மரங்கள் பாடும் காற்றின் ராகம், இதயம் தொடும் இனிய சங்கீதம். இலைகள் நடனமிடும் மெல்லிசையில், பறவைகள் கூட பாடும் கானத்தில். காலைப் பனியில் இலைக...