Sunday, August 11, 2024

திருவாசகம் - திருப்பொன்னூசல்


திருவாசகம் திருப்பொன்னூசல்
----------------------------------------------------
பாடல் எண் 1
சீர்-ஆர் பவளங்-கால் முத்தம் கயிறாக
ஏர்-ஆரும் பொற்பலகை ஏறி இனிது-அமர்ந்து
நாரா யணன்-அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்து-அருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்-தாள் இணை-பாடி
போர்-ஆர்-வேற் கண்-மடவீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 2
மூன்று-அங்கு இலங்கு நயனத்தன் மூவாத
வான் தங்கு தேவர்களும் காணா மலரடிகள்
தேன் தங்கித் தித்தித்து அமுது-ஊறித் தான்-தெளிந்து-அங்கு
ஊன் தங்கி நின்று-உருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன் தங்கு இடைமருது பாடிக் குல-மஞ்ஞை
போன்று-அங்கு அன-நடையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 3
முன்-ஈறும் ஆதியும் இல்லான் முனிவர்-குழாம்
பன்னூறு கோடி இமையோர்கள் தாம்-நிற்பத்
தன்-நீறு எனக்கு-அருளித் தன்-கருணை வெள்ளத்து
மன்-ஊற மன்னு-மணி உத்தர கோசமங்கை
மின்-ஏறு மாட வியன்-மாளிகை பாடிப்
பொன்-ஏறு பூண்-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 4
நஞ்சு-அமர் கண்டத்தன் அண்டத்தவர் நாதன்
மஞ்சு-தோய் மாட-மணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாள் தன்னோடும் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்று-அமுதம் ஊறிக் கருணை-செய்து
துஞ்சல் பிறப்பு-அறுப்பான் தூய புகழ்-பாடிப்
புஞ்சம்-ஆர் வெள்-வளையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 5
ஆணோ அலியோ அரிவையோ என்று-இருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்-குழாம்
நாணாமே உய்ய ஆட்கொண்டு-அருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோண்-ஆர் பிறைச்-சென்னிக் கூத்தன் குணம்-பரவிப்
பூண்-ஆர் வன-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 6
மாது-ஆடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாது-ஆடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு என் தொல்-பிறவித்
தீது-ஓடா வண்ணம் திகழப் பிறப்பு-அறுப்பான்
காது-ஆடு குண்டலங்கள் பாடிக் கசிந்து அன்பால்
போது-ஆடு பூண்-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 7
உன்னற்கு அரிய-திரு உத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்-புகழே
பன்னிப் பணிந்து-இறைஞ்சப் பாவங்கள் பற்று-அறுப்பான்
அன்னத்தின் மேல்-ஏறி ஆடும்-அணி மயில்-போல்
என்-அத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்-பாடிப்
பொன்-ஒத்த பூண்-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 8
கோல வரைக்-குடுமி வந்து குவலயத்து
சால அமுது-உண்டு தாழ்-கடலின் மீது-எழுந்து
ஞாலம் மிகப்-பரிமேற் கொண்டு நமை-ஆண்டான்
சீலம் திகழும் திரு-உத்தர கோசமங்கை
மாலுக்கு அரியானை வாயார நாம்-பாடிப்
பூலித்து அகங்-குழைந்து பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 9
தெங்கு-லவு சோலைத் திரு-த்தர கோசமங்கை
தங்கு-லவு சோதித் தனி-ருவம் வந்தருளி
எங்கள் பிறப்பு-றுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்வான்
பங்கு-லவு கோதையும் தானும் பணி-கொண்ட
கொங்கு-லவு கொன்றைச் சடையான் குணம்-பரவிப்
பொங்கு-லவு பூண்-முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

சத்ரு சம்ஹார திரிசதி

சத்ரு சம்ஹார திரிசதி Sathru Samhaara Thrisathi  ஆயிரம் மந்திரங்கள் கொண்ட தொகுப்பை சகஸ்ரநாமம் என்று கூறுகிறோம். நூற்றியெட்டை அஷ்டோத்தர சதம் எ...