Friday, August 23, 2024

இடரினும் தளரினும் பாடல் || திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

Thursday, August 22, 2024

கடன் தீர பதிகம் - வேத வேள்வியை நிந்தனை செய்துழல் - கடன் பிரச்சனை தீர சிவன் பாடல் திருமுறை : மூன்றாம் திருமுறை பதிகம் . அ௫ளியவர் : திருஞானசம்பந்தர் பண் : பழம்பஞ்சுரம் நாடு : பாண்டியநாடு தலம் : ஆலவாய் (மதுரை)

திருச்சிற்றம்பலம்

பாடல் : 1 வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லி அமணொடு தேரரை வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே பாதி மாதுட னாய பரமனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே. பாடல் : 2 வைதி கத்தின் வழியொழு காதவக் கைத வமுடைக் காரமண் தேரரை எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே மைதி கழ்தரு மாமணி கண்டனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே. பாடல் : 3 மறைவ ழக்கமி லாதமா பாவிகள் பறித லைக்கையர் பாயுடுப் பார்களை முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே மறியு லாங்கையில் மாமழு வாளனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே. பாடல் : 4 அறுத்த வங்கமா றாயின நீர்மையைக் கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடுஞ் செறுத்து வாதுசெ யத்திரு வுள்ளமே முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே. பாடல் : 5 அந்த ணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச் சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே வெந்த நீற தணியும் விகிர்தனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே. பாடல் : 6 வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே காட்டி லானை உரித்தஎங் கள்வனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே. பாடல் : 7 அழல தோம்பும் அருமறை யோர்திறம் விழல தென்னும் அருகர் திறத்திறங் கழல வாதுசெ யத்திரு வுள்ளமே தழல்இ லங்கு திருவுருச் சைவனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே. பாடல் : 8 நீற்று மேனிய ராயினர் மேலுற்ற காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத் தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே ஆற்ற வாளரக் கற்கும் அருளினாய் ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே. பாடல் : 9 நீல மேனி அமணர் திறத்துநின் சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே மாலும் நான்முக னுங்காண் பரியதோர் கோல மேனிய தாகிய குன்றமே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே. பாடல் : 10 அன்று முப்புரஞ் செற்ற அழகநின் துன்று பொற்கழல் பேணா அருகரைத் தென்ற வாதுசெ யத்திரு வுள்ளமே கன்று சாக்கியர் காணாத் தலைவனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே. பாடல் : 11 கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு வாடல் மேனி அமணரை வாட்டிட மாடக் காழிச்சம் பந்தன் மதித்தஇப் பாடல் வல்லவர் பாக்கிய வாளரே.  

திருச்சிற்றம்பலம் 

Wednesday, August 14, 2024

Narasimha Kavasam = POWERFUL PRAYER FOR PROTECTION AGAINST NEGATIVE ENERGY

Sri Narasimha Kavacha Mantra lyrics: narasimha-kavacaṁ vakṣye prahlādenoditaṁ purā sarva-rakṣā-karaṁ puṇyaṁ sarvopadrava-nāśanam sarva-sampat-karaṁ caiva svarga-mokṣa-pradāyakam dhyātvā nṛsiṁhaṁ deveśaṁ hema-siṁhāsana-sthitam vivṛtāsyaṁ tri-nayanaṁ śarad-indu-sama-prabham lakṣmyāliṅgita-vāmāṅgam vibhūtibhir upāśritam catur-bhujaṁ komalāṅgaṁ svarṇa-kuṇḍala-śobhitam śriyāsu-śobhitoraskaṁ ratna-keyūra-mudritam tapta-kāncana-sankāśaṁ pīta-nirmala-vāsasam indrādi-sura-mauliṣṭha sphuran māṇikya-dīptibhiḥ virājita-pada-dvandvaṁ śaṅkha-cakrādi-hetibhiḥ garutmatā chavinayāt stūyamānam mudānvitam sva-hṛt-kamala-saṁvāsaṁ kṛtvā tu kavacaṁ pathet nṛsiṁho me śirah pātu loka-raksātma-sambhavah sarvago ’pi stambha-vāsaḥ phālaṁ me rakṣatu dhvanim nṛsiṁho me dṛśau pātu soma-sūryāgni-locanaḥ smṛtiṁ me pātu nṛhariḥ muni-varya-stuti-priyaḥ nāsāṁ me siṁha-nāśas tu mukhaṁ lakṣmī-mukha-priyaḥ sarva-vidyādhipaḥ pātu nṛsiṁho rasanām mama vaktraṁ pātv indu-vadanaḥ sadā prahlāda-vanditaḥ nṛsiṁhah pātu me kaṇṭhaṁ skandhau bhū-bharaṇānta-kṛt divyāstra-śobhita-bhujo nṛsiṁhaḥ pātu me bhujau karau me deva-varado nṛsiṁhaḥ pātu sarvataḥ hṛdayaṁ yogi-sādhyaś ca nivāsaṁ pātu me hariḥ madhyaṁ pātu hiraṇyāksa-vakṣaḥ-kukṣi-vidāraṇaḥ nābhiṁ me pātu nṛhariḥ sva-nābhi-brahma-saṁstutaḥ brahmāṇḍa-koṭayaḥ kaṭyāṁ yasyāsau pātu me kaṭim guhyaṁ me pātu guhyānāṁ mantrāṇām guhya-rūpa-dhṛk ūrū manobhavaḥ pātu jānunī nara-rūpa-dhṛk jaṅghe pātu dharā-bhāra-hartā yo ’sau nṛ-keśarī sura-rājya-pradaḥ pātu pādau me nṛharīśvaraḥ sahasra-śīrṣā-puruṣaḥ pātu me sarvaśas tanum mahograḥ pūrvataḥ pātu mahā-vīrāgrajo ’gnitaḥ mahā-viṣṇuḥ dakṣiṇe tu mahā-jvālas tu nairṛtau paścime pātu sarveśo diśi me sarvatomukhaḥ nṛsiṁhaḥ pātu vāyavyāṁ saumyāṁ bheeṣaṇa-vigrahaḥ īśānyāṁ pātu bhadro me sarva-maṅgala-dāyakaḥ saṁsāra-bhayadaḥ pātu mṛtyor mṛtyur nṛ-keśarī garjantaṁ garjayantam nija-bhuja-patalaṁ sphoṭayantaṁ hatantaṁ dipyantaṁ tāpayantaṁ divi bhuvi ditijaṁ kṣepayantam kṣipantam krandantaṁ roṣayantaṁ diśi diśi satataṁ saṁharantaṁ bharantaṁ vīkṣantaṁ  

ghūrṇayantaṁ kara-nikara-śataiḥ divya-siṁhaṁ namāmi 

Monday, August 12, 2024

உண்மை , பணிவு

Vegetarian #Vegetables #காய்கரி

Varuna Mudra

Prana Mudra

Sunday, August 11, 2024

திருவாசகம் - திருப்பொன்னூசல்


திருவாசகம் திருப்பொன்னூசல்
----------------------------------------------------
பாடல் எண் 1
சீர்-ஆர் பவளங்-கால் முத்தம் கயிறாக
ஏர்-ஆரும் பொற்பலகை ஏறி இனிது-அமர்ந்து
நாரா யணன்-அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்து-அருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்-தாள் இணை-பாடி
போர்-ஆர்-வேற் கண்-மடவீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 2
மூன்று-அங்கு இலங்கு நயனத்தன் மூவாத
வான் தங்கு தேவர்களும் காணா மலரடிகள்
தேன் தங்கித் தித்தித்து அமுது-ஊறித் தான்-தெளிந்து-அங்கு
ஊன் தங்கி நின்று-உருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன் தங்கு இடைமருது பாடிக் குல-மஞ்ஞை
போன்று-அங்கு அன-நடையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 3
முன்-ஈறும் ஆதியும் இல்லான் முனிவர்-குழாம்
பன்னூறு கோடி இமையோர்கள் தாம்-நிற்பத்
தன்-நீறு எனக்கு-அருளித் தன்-கருணை வெள்ளத்து
மன்-ஊற மன்னு-மணி உத்தர கோசமங்கை
மின்-ஏறு மாட வியன்-மாளிகை பாடிப்
பொன்-ஏறு பூண்-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 4
நஞ்சு-அமர் கண்டத்தன் அண்டத்தவர் நாதன்
மஞ்சு-தோய் மாட-மணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாள் தன்னோடும் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்று-அமுதம் ஊறிக் கருணை-செய்து
துஞ்சல் பிறப்பு-அறுப்பான் தூய புகழ்-பாடிப்
புஞ்சம்-ஆர் வெள்-வளையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 5
ஆணோ அலியோ அரிவையோ என்று-இருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்-குழாம்
நாணாமே உய்ய ஆட்கொண்டு-அருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோண்-ஆர் பிறைச்-சென்னிக் கூத்தன் குணம்-பரவிப்
பூண்-ஆர் வன-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 6
மாது-ஆடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாது-ஆடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு என் தொல்-பிறவித்
தீது-ஓடா வண்ணம் திகழப் பிறப்பு-அறுப்பான்
காது-ஆடு குண்டலங்கள் பாடிக் கசிந்து அன்பால்
போது-ஆடு பூண்-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 7
உன்னற்கு அரிய-திரு உத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்-புகழே
பன்னிப் பணிந்து-இறைஞ்சப் பாவங்கள் பற்று-அறுப்பான்
அன்னத்தின் மேல்-ஏறி ஆடும்-அணி மயில்-போல்
என்-அத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்-பாடிப்
பொன்-ஒத்த பூண்-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 8
கோல வரைக்-குடுமி வந்து குவலயத்து
சால அமுது-உண்டு தாழ்-கடலின் மீது-எழுந்து
ஞாலம் மிகப்-பரிமேற் கொண்டு நமை-ஆண்டான்
சீலம் திகழும் திரு-உத்தர கோசமங்கை
மாலுக்கு அரியானை வாயார நாம்-பாடிப்
பூலித்து அகங்-குழைந்து பொன்னூசல் ஆடாமோ.

பாடல் எண் 9
தெங்கு-லவு சோலைத் திரு-த்தர கோசமங்கை
தங்கு-லவு சோதித் தனி-ருவம் வந்தருளி
எங்கள் பிறப்பு-றுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்வான்
பங்கு-லவு கோதையும் தானும் பணி-கொண்ட
கொங்கு-லவு கொன்றைச் சடையான் குணம்-பரவிப்
பொங்கு-லவு பூண்-முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 

Saturday, August 10, 2024

Pudhea Paadhai

Manikarnika Ashtakam With Lyrics | Goddess Manikarnika Chant | Most Powerful Mantra

தர்ப்பணம் செய்து முடிந்ததும் சொல்ல வேண்டிய மணிகர்ணிகா அஷ்டகம் 

 தர்ப்பணம் செய்து முடிந்ததும் ஸ்ரீ ஆதி சங்கரர் சொல்லிய ஸ்ரீ மணிகர்ணிகா அஷ்டகம் என்ற துதியை மணிகர்ணிகா குளத்தில் குளித்த பிறகு கூற வேண்டும்.

அவ்வாறு வழிபட்டு பித்ரு தர்ப்பணமும் செய்பவர்கள் சவுபாக்கிய வாழ்வை பெற்று இறை நலம் பெறுவார்கள். நாட்டில் மொத்தம் 4 மணிகர்ணிகா தீர்த்தங்கள் உள்ளன.

1. வாரணாசி (காசியில்) விஸ்வநாதர் கோவிலில்- மணிகர்ணிகா கட்டம்.
 2. மதுரை திருப்புவனம்- பூவணநாதர் கோவிலில் மணிகணிகாகுளம். 
3. தஞ்சை மாவட்டம் வேதாரண்யம் தர்ப்பாண்யேஸ்வரர் கோவிலில் மணிகர்ணிகா கங்கை
4. சென்னை திருநீர்மலை ரங்கநாதர் கோவில் மலை அடி வாரத்தில் -மணிகர்ணிகா திருக்குளம் என்னும் புஷ்கரணி.

கந்தனுக்கு சரவணப் பொய்கையையே புனித நீரூற்று என்பது போன்று காசிக்கு சென்று மகாளய தர்ப்பணம் செய்த முழுப்பலனையும் பெற்றிட அவரவர் தகப்பனாரின் திதி நாளன்று மேற்சொன்ன மணிகர்ணிகாகளில் தர்ப்பணம் செய்தோ, அல்லது மகாளய அமாவாசையிலோ தர்ப்பண பூஜை செய்து மணிகர்ணிகா அஷ்டகத்துதியை மூன்று முறை படிக்க வேண்டும்.

சத்ரு சம்ஹார திரிசதி

சத்ரு சம்ஹார திரிசதி Sathru Samhaara Thrisathi  ஆயிரம் மந்திரங்கள் கொண்ட தொகுப்பை சகஸ்ரநாமம் என்று கூறுகிறோம். நூற்றியெட்டை அஷ்டோத்தர சதம் எ...