Monday, September 1, 2025

உடல் கூறு பற்றி பட்டினத்தார் எழுதிய பாடல் - உடற்கூற்று வண்ணம்

 பிறப்பு முதல் இறப்பு வரை மனிதரின் நிலைகளை அழகாக சொல்கிறார் பட்டினத்தார்....

ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி

இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி

உணர்வு கலங்கி ஒழுகிய விந்து

ஊறு சுரோணித மீது கலந்து

பனியிலோர் பாதி சிறு துளி மாது

பண்டியில் வந்து புகுந்து திரண்டு

பதுமரரும்பு கமடம் இதென்று

பார்வைமெய் வாய்செவி கால்கைகள் என்ற

உருவமும் ஆகி உயிர் வளர் மாதம்

ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை

உதரமகன்று புவியில் விழுந்து

யோகமும் வாரமும் நாளும் அறிந்து

ஒளிநகை ஊறல் இதழ் மடவாரும்

உவந்து முகந்திட வந்து தவழ்ந்து

மடியில் இருந்து மழலை மொழிந்து

வா இரு போ என நாமம் விளம்ப

உடைமணி ஆடை அரைவடம் ஆட

உண்பவர் தின்பவர் தங்களொடுண்டு

தெருவினிலிருந்து புழுதி அளைந்து

தேடிய பாலரடோடி நடந்து

அஞ்சு வயதாகி விளையாடியே

உயர்தரு ஞான குரு உபதேசம்

முத்தமிழின் கலையும் கரை கண்டு

வளர்பிறை என்று பலரும் விளம்ப

வாழ் பதினாறு பிராயமும் வந்து

மதனசொரூபன் இவன் என மோக

மங்கையர் கண்டு மருண்டு திரண்டு

வரிவிழி கொண்டு சுழிய எறிந்து

மாமயில்போல் அவர் போவது கண்டு

மனது பொறாமல் அவர் பிறகோடி

தேடிய மாமுதல் சேர வழங்கி

வளமையும் மாறி இளமையும் மாறி

வன்பல் விழுந்திருகண்கள் இருண்டு

வயது முதிர்ந்து நரைதிரை வந்து

வாதவிரோத குரோதமடைந்து

செங்கையில் ஓர் தடியும் ஆகியே

வருவது போவது ஒருமுதுகூனும்

மந்தி எனும்படி குந்தி நடந்து

மதியும் அழிந்து செவிதிமிர் வந்து

வாய் அறியாமல் விடாமல் மொழிந்து

கலகலவென்று மலசலம் வந்து

கால்வழி மேல்வழி சார நடந்து

கடன்முறை பேசும் என உரைநாவும்

உறங்கிவிழுந்து கைகொண்டு மொழிந்து

கடைவழி கஞ்சி ஒழுகிட வந்து

பூதமும் நாலு சுவாசமும் நின்று

நெஞ்சு தடுமாறி வரும் நேரமே

வளைபிறை போல எயிரும் உரோமம்

முன்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்ச

மனதும் இருண்ட வடிவும் இலங்க

மாமலை போல் யமதூதர்கள் வந்து

வலைகொடு வீசி உயிர்கொடு போக

மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து

மடியில் விழுந்து மனைவி புலம்ப

மாழ்கினரே இவர் காலமறிந்து

வரிசை கெடாமல் எடும் எனஓடி

வந்திள மைந்தர் குனிந்து சுமந்து

கடுகி நடந்து சுடலை அடைந்து

மானிட வாழ்வென வாழ்வென நொந்து

விறகிடமூடி அழல் கொடுபோட

வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்

உருகி எலும்பு கருகி அடங்கி

ஓர்பிடி நீறும் இலாத உடம்பை

நம்பும் அடியேனை இனி ஆளுமே....


 

Sunday, August 31, 2025

காசிப முனிவர் அருளிய ஸ்ரீ விநாயகர் கவசம்

பிள்ளையார் கவசம்

தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள் காக்க

வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க
வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தரதேக மகோற்கடர் தாம் அமர்ந்து காக்க
விளரற நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க
புருவந் தம்மைத் தளர்வின் மகோதரர் காக்க
தடவிழிகள் பால சந்திரனார் காக்க !!

உதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு, பல், காது, மூக்கு காக்க

கவின் வளரும் அதரம் கசமுகர் காக்க
காலங் கணக்கிரீடர் காக்க
நவில் சிபுகம் கிரிசை சுதர் காக்க
நனிவாக்கை விநாயகர் தாம் காக்க
அவிர்நகை துன்முகர் காக்க
வளர் எழில் செஞ் செவி பாச பாணி காக்க
தவிர்தலுறாது இளங் கொடிபோல் வளர்மணி
நாசியைச் சிந்திதார்த்தர் காக்க !!

முகம், கழுத்து, இணையான தோள்கள், உள்ளம், வயிறு காக்க

காமுரு பூமுகந்தன்னைக் குணேசர் நனி காக்க
களங் கணேசர் காக்க
வாமமுறும் இருதோளும் வயங்கு கந்த
பூர்வசர் தாம் மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணிமுலை விக்கின விநாசர் காக்க
இதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்க
அகத்தினைத் துலங்கு ஏரம்பர் காக்க !!

பக்கங்கள், தொண்டை காக்க

பக்கம் இரண்டையுந் தராதரர் காக்க
பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரர் காக்க
விளங்கிலிங்கம் வியாள பூடணர் தாம் காக்க
தக்க குய்யந் தன்னை வக்கிரதுண்டர் காக்க
சகனத்தை அல்லல் உக்க கணபர் காக்க
ஊருவை மங்கள மூர்த்தி உவந்து காக்க

முழங்கால்கள், இருகால்கள், இருகைகள், முன்கைகள் காக்க

தாள்முழந்தாள் மகாபுத்தி காக்க
இரு பதம் ஏகதந்தர் காக்க
வாழ்கரம் க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க
முன்கையை வணங்குவார்நோய்
ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க
விரல் பதும அந்தர் காக்க
கேழ்கிளரும் நகங்கள் விநாயகர் காக்க
கிழக்கினிற் புத்தீசர் காக்க !!

திக்குகள் அனைத்திலிருந்தும் காக்க

அக்னியில் சித்தீசர் காக்க
உமா புத்திரர் தென் திசைகாக்க
மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க
விக்கினவர்த்தனர் மேற் கென்னுந் திக்கதனிற் காக்க
வாயுவிற் கச கர்ணர் காக்க
திகழ்உதீசி தக்கநிதி பர் காக்க
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க !!

பகல், இரவு முதலிய காலங்களில் பிற தொல்லைகளிலிருந்தும் காக்க

ஏகதந்தர் பகல் முழுதும் காக்க
இரவினும் சந்தி இரண்டன் மாட்டும்
ஓகையின் விக்கினகிருது காக்க
இராக்கதர் பூதம் உறு வேதாளம்
மோகினிபேய் இவையாதி உயிர்திறத்தால்
வருந்துயரம் முடிவிலாத
வேகமுறு பிணி பலவும் விலக்கு பாசாங்குசர் தாம் விரைந்துகாக்க !!

மானம், புகழ் முதலியவற்றையும் உற்றார், உறவினரையும் காக்க

மதிஞானம் தவம் தானம் மானம் ஒளி
புகழ்குலம் வண்சரீரம் முற்றும்
பதிவான தனம் தானியம் கிருதம்
மனைவி மைந்தர் பயில்நட் பாதிக்
கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க
காமர் பவுத்திரர் முன்னான
விதியாரும் சுற்றமெல்லாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க !!

படிப்போர் நோயற்றவராய் வாழ்வார்

வென்றி சீவிதம் கபிலர் காக்க
கரியாதி எல்லாம் விகடர் காக்க
என்று இவ்வாறிதுதனை முக்காலமும்
ஓதிடினும் பால் இடையூறொன்றும்
ஒன்று உறா முனிவர் அவர்காள் அறிமின்கள்
யாரொருவர் ஓதினாலும்
மன்ற ஆங்கவர்தேகம் பிணியற
வச்சிர தேகம் ஆகி மின்னும் !!

Ganapathi Mantram: விநாயகர் காரிய சித்தி மாலை : காசிப முனிவர் அருளிய படல் வரிகள்

பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவண்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ்
உலகிற்பிறங்கும் விகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம்புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.

இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் கரர்வழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம்.

மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.

வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்கு பர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன் அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம்அடைகின்றோம்

மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.


Saturday, August 30, 2025

கூட்டத்தில் தொலைந்து போக விரும்பவில்லை....

 மனிதர்களை சந்திக்க விரும்பவில்லை,

அவர்கள் வலிகள் என்னை தொட வேண்டாம். இருட்டில் ஒளிரும் நட்சத்திரம் போல, நான் தனியே வாழ விரும்புகிறேன். மனிதர்களை சந்திக்க விரும்பவில்லை, என் உலகம் எனக்கே போதும். கூட்டத்தில் தொலைந்து போக விரும்பவில்லை, தனிமையின் இனிமை எனக்கு போதும். காற்று போல சுதந்திரமாக இருக்க, நான் என் வழியில் செல்ல விரும்புகிறேன். மனிதர்களை சந்திக்க விரும்பவில்லை, என் உலகம் எனக்கே போதும். மலைகளின் உச்சியில் தனித்திருக்க, என் சிந்தனைகள் என்னுடன் போதும். அலைகளின் சத்தம் கேட்கும் கடல்போல, நான் அமைதியில் மூழ்க விரும்புகிறேன். மனிதர்களை சந்திக்க விரும்பவில்லை, என் உலகம் எனக்கே போதும். பறவைகளின் தனி பயணம் போல, நான் வானத்தில் பறக்க விரும்புகிறேன். உறவுகளின் சுமை தாங்க விரும்பவில்லை, என் தனிமை என்னை காக்கும். மனிதர்களை சந்திக்க விரும்பவில்லை, என் உலகம் எனக்கே போதும். கூட்டத்தில் தொலைந்து போக விரும்பவில்லை, தனிமையின் இனிமை எனக்கு போதும்..........! கூட்டத்தில் தொலைந்து போக விரும்பவில்லை, தனிமையின் இனிமை எனக்கு போதும்........! கூட்டத்தில் தொலைந்து போக விரும்பவில்லை, தனிமையின் இனிமை எனக்கு போதும்.........!



Friday, August 29, 2025

பிராண முத்திரை

 Referred to as ‘life force’, the word 'Prana' originally stems from the Sanskrit word for ‘inhalation’. It can be understood as the breath of life and the energy behind everything that exists in the universe. Developing a way to build and contain Prana within the body is an important part of yoga practice. When you're feeling low in energy or your meditation practice is focused on building vitality, this is the Mudra to use in order to enhance a sense of aliveness.

This Mudra is considered one of the most important due to its ability to awaken dormant energy within the body, but it can also help us tune into the Pranic energies that surround us. It is said to gradually improve our immune system and rejuvenate the body.

To come into this Mudra touch the tips of your ring and pinky fingers to the tip of your thumb, leaving your index and middle fingers straight. For this particular Mudra to have its full effect, it should be practiced alone and in secret. So shhh!




Wednesday, August 27, 2025

ஜாதிகள் இல்லையடி பாப்பா பாரதி பாடினார், நெஞ்சில் நம்பினேன்

 

ஜாதிகள் இல்லையடி பாப்பா

பாரதி பாடினார், நெஞ்சில் நம்பினேன்

நட்பை விதைத்து, உள்ளம் திறந்து

எல்லோரையும் ஒன்றென நேசித்தேன் . 


பள்ளியில் கேட்டேன், கவிதையின் நாதம்

கைகள் கோர்த்து, கனவில் பயணித்தோம்

ஜாதியின் பேர் இல்லை, நினைத்து மகிழ்ந்தோம்

ஒற்றுமை வாழ்வில் இன்பம் கண்டோம்

ஆனால் கனவு, மெல்ல உடைந்தது

புன்னகை மறைந்து, உண்மை எழுந்தது

நிழலாய் ஜாதி, மனிதம் தடுத்தது

பிரிவின் கோடு இன்னும் இருந்தது.


ஜாதிகள் இல்லையடி பாப்பா

பாரதி பாடினார், நெஞ்சில் நம்பினேன்

நட்பை விதைத்து, உள்ளம் திறந்து

எல்லோரையும் ஒன்றென நேசித்தேன்  .


நரைத்த பின்னே, உண்மை தெரிந்தது

மனிதர் மனதில், பாகுபாடு உண்டு

கோவிலும் தெருவும், பிரிவைப் பேசுது

பாரதி கனவு, இன்னும் தூங்குது.


ஆயினும் நெஞ்சம், நம்பிக்கை தாங்குது

ஒற்றுமை விதையை, தூவுவோம் மீண்டும்

கைகள் கோர்ப்போம், புதிய பயணத்தில்

ஜாதியை வெல்வோம், உறுதி மனதில்  .


ஜாதிகள் இல்லையடி பாப்பா

பாரதி பாடினார், நெஞ்சில் நம்பினேன்

நட்பை விதைத்து, உள்ளம் திறந்து

எல்லோரையும் ஒன்றென நேசித்தேன்  .


நரைத்த பின்னே, உண்மை தெரிந்தது

மனிதர் மனதில், பாகுபாடு உண்டு

கோவிலும் தெருவும், பிரிவைப் பேசுது

பாரதி கனவு, இன்னும் தூங்குது.


ஆயினும் நெஞ்சம், நம்பிக்கை தாங்குது

ஒற்றுமை விதையை, தூவுவோம் மீண்டும்

கைகள் கோர்ப்போம், புதிய பயணத்தில்

ஜாதியை வெல்வோம், உறுதி மனதில்  .


புதிய உலகம், நாம் படைப்போம்

ஜாதியின் நிழலை, அழித்து மறப்போம்

பாரதி குரல், இன்னும் எழுந்தது

மனிதம் வெல்லும், நம்பிக்கை கொண்டது!

(இந்த பாடல் பிறந்த கதை. நான் படித்த இடிகரை அரசு உயர் பள்ளியில் ஒரு மாணவராக இருந்தபோது, எனக்கு பாரதியார் கவிதைகள் நூலை பரிசாக வழங்கினார்கள். அந்த நூலில் உள்ள "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்ற கவிதை என் இதயத்தில் ஆழமாக ஒலித்தது. பாரதியாரின் கவிதைகள் என் மனதில் நீங்காத இடம் பிடித்தன; அவை சமூகத்தில் ஜாதி வேறுபாடுகள் இல்லை என்ற நம்பிக்கையை என்னுள் விதைத்தன. ஆனால், வாழ்க்கையின் உண்மை முகம் வேறு விதமாக இருந்தது – சமுதாயத்தில் ஜாதி பாகுபாடுகள் இன்னும் ஆழமாக வேரூன்றியிருந்தன, அது என் இலட்சியங்களுக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான முரண்பாட்டை உணர்த்தியது. பாரதியாரின் சொற்கள் ஊக்கமளித்தாலும், உண்மையான மாற்றத்திற்கு இன்னும் போராட வேண்டியிருப்பதை அது எனக்கு உணர்த்தியது.அதன் வெளிப்பாடே இந்த பாடல்)

Sunday, August 17, 2025

திருவிளக்கு பூஜை


திருவிளக்கு ஒளி வீசுதே,
தீப ஒளி தெய்வம் ஆகுதே, அம்மனை வணங்கிடுவோம்,
ஆனந்தமாய் பூஜை செய்வோம்! விளக்கொளியில் ஞானம் தோன்றும்,
வினைகள் அகலும் மனம் தெளியும், சக்தி தேவி அருள் பொழியும்,
சமாதானம் நெஞ்சில் நிறையும். மஞ்சள் மலரால் அலங்கரிப்போம்,
மங்கள தீபம் ஏற்றுவோம், செல்வவிநாயகர் கோவிலில்,
திருவிளக்கு பூஜை செய்து,
தெய்வீக பாதை நடப்போம்! திருவிளக்கு ஒளி வீசுதே,
தீப ஒளி தெய்வம் ஆகுதே, அம்மனை வணங்கிடுவோம்,
ஆனந்தமாய் பூஜை செய்வோம்! நல்லெண்ணெய் திரி போட்டு,
நம்பிக்கையுடன் தீபம் ஏற்று, பக்தியுடன் பாடல் பாடி,
பரம்பொருளைப் போற்றுவோம். அன்னையின் கருணை பெறுவோம்,
அறியாமை இருளை அகற்றுவோம், செல்வவிநாயகர் கோவிலில்,
திருவிளக்கு பூஜை செய்து,
திவ்ய ஒளியில் மூழ்குவோம்! திருவிளக்கு ஒளி வீசுதே,
தீப ஒளி தெய்வம் ஆகுதே, அம்மனை வணங்கிடுவோம்,
ஆனந்தமாய் பூஜை செய்வோம்! வீட்டில் செல்வம் நிறைந்திடவே,
விளக்கு ஒளியால் புனிதமாகவே, குடும்பம் மகிழ்ச்சி பொங்கிடவே,
குறைகள் அகலும் அருள் பெறவே. மங்களகரமாய் தீபம் ஏற்றி,
மனதில் அமைதி பெறுவோம், செல்வவிநாயகர் கோவிலில்,
திருவிளக்கு பூஜை செய்து,
தெய்வத்துடன் ஒன்றாகுவோம்! திருவிளக்கு ஒளி வீசுதே,
தீப ஒளி தெய்வம் ஆகுதே, அம்மனை வணங்கிடுவோம்,
ஆனந்தமாய் பூஜை செய்வோம்!

உடல் கூறு பற்றி பட்டினத்தார் எழுதிய பாடல் - உடற்கூற்று வண்ணம்

  பிறப்பு முதல் இறப்பு வரை மனிதரின் நிலைகளை அழகாக சொல்கிறார் பட்டினத்தார்.... ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி உணர...